நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் தொடரும்!

Rainning
Rainning

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் சில மணித்தியாலங்களிலும் தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதற்கமைய, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பாகங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இவ்வாறு மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் சில பகுதிகளில் 150 மில்லி மீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது.