கரு ஜயசூரிய ஐ.தே.க தலைமை பதவிக்கு ஆவல்!

2 mi
2 mi

ஐக்கிய தேசியக் கட்சி கட்சி தமக்கு தலைமைப் பொறுப்பை வழங்குமானால் சில நிபந்தனைகளுடன் அதனை மேற்கொள்வதற்கு தாம் தயாராகவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அனைத்து மதத் தலைவர்கள், ஐக்கிய தேசிய முன்னணியின் சிரேஷ்ட மற்றும் இளைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சமூகத்தினரிடம் கலந்துரையாடும் போதே சபாநாயகர் கரு ஜயசூரியஇதனைக்கூறியுள்ளார் .