கொவிட்-19 பரவலுக்கு மத்தியில், புண்ணிய வசதிகள் கிடைக்கப்பெறாத சர்வமத வழிபாட்டுத் தலங்களுக்கு குறியீட்டு ரீதியில் நன்கொடை பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அலரி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
பயணத்தடை காரணமாக, புண்ணிய வசதிகள் கிடைக்கப்பெறாத, விகாரைகள் உட்பட பிற வழிபாட்டுத் தலங்களுக்கு, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில், பிரதமரின் ஆலோசனையின் பேரில், புண்ணிய வசதிகள் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.