மட்டக்களப்பில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டவரின் மரணம் தொடர்பான முடிவு வெளியாகியுள்ளது

death25
death25

மட்டக்களப்பில் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்ட இளைஞன் 4  ஜஸ் போதைப் பொருள் பைக்கற்றை வாயில் போட்டு விழுங்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் 25 கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு காவல் நிலைய கூட்டில் அடைத்து வைக்கப்பட இளைஞன் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (04) அதிகாலையில் இடம்பெற்றது இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞன் காவற்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்ததாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

 இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை நீதவான் பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். அதேவேளை வாழைச்சேனை காவற்துறை பிராந்திய காவற்துறை அத்தியட்சகர் ஜெயந்த  தலைமையில் விசேட காவற்துறைகுழு அமைக்கப்பட்டு விசாணையிடம்பெற்று வருகின்றது.

 இந்த நிலையில் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் குறித்த நபர் 4 பைக்கற்றுக்களை கொண்ட ஜஸ் போதைப் பொருளை வாயில் போட்டு விழுங்கிய நிலையில் அது நெஞ்சுப் பகுதியில் ஜஸ் போதைப் பொருள் வெடித்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாககாவற்துறையினர் தெரிவித்தனர்.