வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம்!

2 gg 2
2 gg 2

எதிர்வரும் பண்டிகை காலத்தில் சகல அதிவேக வீதிகளிலும் ஏற்படக் கூடிய வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான விஷேட வேலைத்திட்டம் ஒன்றை வீதி மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சு மேற்கொண்டுள்ளது.

 இதற்கமைய அதிவேக வீதியின் சகல நுழைவாயில் பகுதிகளிலும் தற்காலிக அனுமதி சீட்டு வழங்கும் கூடங்களை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 ஜா-எல, சீதுவ, பேலியாகொடை, கெரவலப்பிட்டிய, கடவத்தை, கொட்டாவ, பின்னதுவ, கொடகம மற்றும் கஹத்துடுவ ஆகிய நுழைவு பகுதிகளில் இந்த தற்காலிக கூடங்கள் அமைக்கப்படவுள்ளன.