ஓட்டமாவடியில் கொரோனாவால் ஆசிரியர் ஒருவர் மரணம்!

01 3 1 1
01 3 1 1

நாட்டில் தற்போது துரிதமாக பரவிவரும் கொரோனா வைரஸ் மூன்றாவது அலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பணவு நாடு பூராகவும் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் வழிகாட்டலில் புதுக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு கிராம அதிகாரி அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

01 6 1

இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு கிராம சேவை அதிகாரி எஸ்.வரதராஜன் புதுக்குடியிருப்பு சமூர்த்தி உத்தியோகத்தர் திருமதி.கிருஷாந்தி ஜனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கொடுப்பனவினை வழங்கி வைத்தனர். ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் நேற்று வியாழக்கிழமை கொரோனாவினால் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இன்று வெள்ளிக்கிழமை 03 அன்டிஜன் பரிசோதனை மற்றும் 52 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

01 9 1

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் இணங்காணப்பட்ட நிலையில் ஓட்டமாவடி பிரதேசத்தில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் வழிகாட்டலில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

01 5 1 1

கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடைய நபர்கள் 03 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும் மேலும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடைய நபர்கள் ஐம்பத்தி இரண்டு (52) பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளது. ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் நேற்று வியாழக்கிழமை கொரோனாவினால் 57 வயதுடைய காவத்தமுனை அல் அமீன் வித்தியாலய ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுள்ளார். குறித்த பரிசோதனையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதர் ஏ.எல்.நௌபர் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி, அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.