வவுனியா மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றுறுதியானவாகளின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன், இதுவரை 17 பேர் மரணித்துள்ளனர்.
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் நேற்று (06) வரையான காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தில் 1,040 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம், வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 17 பேர் மரணித்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.