மட்டக்களப்பு – இலுப்படிச்சேனை – காரக்காடு பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த 56 வயதான ஒரு பிள்ளையின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சமையல் மின் உபகரணம் ஒன்று சேதமடைந்திருந்த நிலையில் அதனை மின்சாரத்துடன் இணைக்க முயற்சித்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சடலம் தற்போது பிரேத மற்றும் பீசீஆர் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கரடியனாறு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.