ராஜித நீதிமன்றில் ஆஜர்

image 1503569486 cbbdfff43c
image 1503569486 cbbdfff43c

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன சற்று முன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.

இரகசிய பொலிஸார் தன்னை கைது செய்வதற்கு முன்னர் பிணையில் விடுதலை செய்து உத்தரவிடுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பிணை மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்திருந்தார்

இந்த மனு குறித்த வழக்கு விசாரணைக்காகவே அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் இரகசிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விசாரணைகளின் அடிப்படையில் தன்னை கைது செய்வதற்காக பொலிஸார் தயாராகி வருவதாகவும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது