பலாலி இராணுவ முகாமில் விமானப் படை அதிகாரி பொலநறுவைக்கு சென்று கொண்டிருக்கையில் அவரிடமிருந்து நகை பணம் போன்றவைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் யாழ்.ஊரெழு பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த அதிகாரி தனது குடும்பத்தாருடன் சொந்த ஊரான பொலநறுவை செல்வதற்காக இன்று அதிகாலை முச்சக்கர வண்டியில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த போது ஊரெழு பகுதியில் வைத்து இடைமறித்த முகமூடி அணிந்த மர்ம கும்பல் அவர்களிடமிருந்து நகை, பணம் போன்றவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்