யாழ் பல்கலை மாணவி சடலமாக மீட்பு

death 1
death 1

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதலாம் வருட மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியைச் சேர்ந்த மகேந்திரம் யதுஷா ( வயது-21) என்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீடக்கப்பட்டார்.

மல்லாகம் விசாலாட்சி வீதியில் உள்ள தங்குமிட வீடு ஒன்றிலிருந்து அவர் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

“மாணவி, மல்லாகத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர்ந்து வருகிறார். அவர் இன்று பல்கலைக்கழகத்துக்குச் சென்று, அங்கிருந்து கிளிநொச்சியிலுள்ள தனது வீட்டு சகோதரியுடன் சென்றுவிட்டு மல்லாகம் திரும்பியுள்ளார்.

இந்நிலையில் அவரது அறையில் மின்விளக்குகள் எரியவில்லை என்று வீட்டில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

உயிரை மாய்த்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. நாளை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்பே சரியான காரணத்தை வெளிப்படுத்த முடியும்” என்று தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னேடுக்கும் தெல்லிப்பளை பொலிஸார், மாணவியின் சடலத்தை மீட்டு தெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.