சீனாவினால் இறக்குமதி செய்யப்படும் சேதன பசளையை நாட்டின் பயிர் செய்கைகளுக்கு பயன்படுத்துவது வெற்றிகரமான செயல் அல்லவென ருஹூனு பல்கலைக்கழகத்தின் விவசாய பொருளாதார அறிவியல் தொடர்பான சிரேஸ்ட பேராசிரியர் எல்.எம்.அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சேதன பசளை உற்பத்தி ஊடாக நாட்டின் மண் வளம் அழிவடையும் அவதானம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.