தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரிகள் 4286 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இதில் சிங்கள மொழி மூலம் 2,340 ஆசியர்களும் , தமிழ் மொழி மூலம் 1,300 ஆசிரியர்களும் மற்றும் ஆங்கில மொழி மூலம் 646 ஆசிரியர்களும் உள்ளடங்களாக இந்த நியமனக் கடிதங்கள் பிரதமரால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர்கள் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய கல்வி அமைச்சர் அகிலா விராஜகாரியவாசம் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது,