மன்னார் மாவட்ட குழுவினர் கருணாவுடன் கலந்துரையாடல்

karuna 0000
karuna 0000

மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு குறைப்பாடுகள் தொடர்பில் தீர்வினை பெறும் முகமாக மன்னாரில் இருந்து விசேட குழுவொன்று முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

விநாயகமூர்த்தி முரளிதரனின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ரி.பாஸ்கரன் தலைமையிலான குழுவினர் மன்னார் மாவட்டத்தின் முன்னாள் போராளிகள், காணிப்பிரச்சினை, பொது வைத்தியசாலைகள் தொடர்பிலான பிரச்சினைகள் பற்றி இதன் போது தெரியப்படுத்தியுள்ளனர்.

குறித்த பிரச்சினைகள் தொடர்பாகவும், உடன் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் உரிய அமைச்சர்கள் மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.