கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றுள்ள விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
கிளிநொச்சி 155ஆம் கட்டை ஏ9 வீதியில் இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றது.
துவிச்சக்கரவண்டி ஒன்றுடன் ஹயஸ்ரகவாகனம் ஒன்றுமோதியதில் இந்தவிபத்து ஏற்பட்டுள்ளது விபத்தில் காயமடைந்த குறித்த நபரை
வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் மலையாளபுரம் பகுதியைச் சேர்ந்த 8 பிள்ளைகளின் தந்தையான சின்னையா சுப்ரமணியம் எனும் 73 வயதான முதியவரே உயிரிழந்துள் ள்ளதாக தெரியவந்துள்ளது
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.