சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 45 பேர் கைது

kaithu
kaithu

வடக்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளைப் பிரிவுகளால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 4,040 கடல் அட்டைகளுடன் 45 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களுடன் அவர்கள் உபயோகித்த சுழியோடல் உபகரணங்களையும் கடற்படை கைப்பற்றியுள்ளது.

வளைப்பாடு மற்றும் கிரஞ்சி பகுதிகளில் வட மத்திய கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண கடற்றொழில் அலுவலகங்களிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்தது.