யானை தாக்கி ஒருவர் பலி

Death body 720x450 1
Death body 720x450 1

திருகோணமலை மாவட்டத்தின் சூரியபுர காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற நபர் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக சூரியபுர காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் இன்று (11) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தில் வான்எல,கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய கே.குலதூங்க என்பவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.