இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு வந்த நபர் கைது!

download 1 2
download 1 2

சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து கடல் மார்க்கத்தின் ஊடாக இலங்கை வந்த ஒருவர் முள்ளியாவலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளரும் பிரதி காவற்துறை அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் 2009 ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவிற்கு சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அங்கு நாகபட்டிணம் பகுதியில் வாழ்ந்த அவர் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி கடல் மார்க்கத்தின் ஊடாக சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் நுழைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த நபர் சுமார் இரண்டரை மாதங்கள் தலைமறைவாகி இருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.