கோவிட் நோயின் தீவிரத்தன்மை!

கொரோனா வைரஸ் 350x250 2
கொரோனா வைரஸ் 350x250 2

யாழ் போதனா வைத்தியசாலைக்கு தற்போது தினமும் விடுதியில் சிகிச்சையளிக்கப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 80 ஆகக் காணப்படுகின்றது. தற்போது
குடாநாட்டில் கொரோனா தொற்று சமூக மட்டத்தில் பரவிக் காணப்படலாம்.எழுந்தமானமான சமூகமட்ட பரிசோதனைகளிலும் வைத்தியசாலைக்கு நோய் நிலையில் வரும் நோயாளிகளிலும்
மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் அடிப்படையிலேயே கொரோனா நோயாளிகள் இனம்
காணப்படுகின்றனர். இதனால் வைத்தியசாலை தான் கோவிட் தொற்றுக்கு உரிய இடம் எனத்
தவறான அபிப்பிராயம் ஏற்படல் தவறு. உண்மையில் வைத்தியசாலையில் கொரோனா
தொற்றுநோயாளர்கள் மூலம் ஏனையவர்களுக்கு தொற்றுப் பரவாது முற்காப்புகளுடனேயே
சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போது கொரோனா தொற்றினால் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் 34மூ ஆனோர் சலரோக
நோயாளிகளாக உள்ளனர். 20மூ ஆனோர் கற்பிணித் தாய்மார்களாக உள்ளனர். 5மூ ஆனோர்
சிறுபிள்ளைகளாக உள்ளனர்.
சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளில் 25மூ ஆனோர் சுவாசிப்பதற்கு ஒட்சிசன்
தேவைப்படுகின்றது. இங்குள்ள கொரோனா நோயாளிகளின் மரணவீதம் 1.2மூ ஆக உள்ளது.