இரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரை 9,500 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார அத்தியட்சகர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
எஹலியகொட, கிரியெல்ல, இரத்தினபுரி, குருவிட்ட, பெல்மதுளை, எம்பிலிபிட்டி, இம்புல்பே, மற்றும் பலாங்கொடை பிரதேசங்களில் தொற்றாளர்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த இராணுவத்தினர், காவல்துறையினர், சுகாதார பிரிவினர், அரசியல்வாதிகள், பொது மக்கள் என அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என சப்ரகமுவ மாகாண சுகாதார அத்தியட்சகர் சுட்டிக்காட்டியுள்ளார்.