சுகாதார விதிமுறைகளை மீறி திருமணம் ; அனைவரும் தனிமைப்படுத்தல்!

punjab love marriage ban 1525342496 725x725 725x406 1
punjab love marriage ban 1525342496 725x725 725x406 1

யாழில். இரகசிய திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களை புகைப்பட பிடிப்பாளரின் புகைப்படம் மற்றும் காணொளி ஆதாரத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நேற்று நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் வடமராட்சி , கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் உள்ள காரணவாய் மேற்கில் அமைந்துள்ள மணப்பெண் வீட்டில் , சுகாதார பிரிவின் அனுமதியின்றி திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.

கட்டுவனை சேர்ந்த மணமகன் குடும்பம் மற்றும் உறவினர்கள் மணப்பெண் வீட்டிற்கு சென்று திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர். அந்நிகழ்வில் இரு வீட்டாருமாக 50க்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இது தொடர்பில் நெல்லியடி காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து குறித்த வீட்டிற்கு காவல்துறையினர் சென்ற போது திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த உறவினர்கள் பலரும் தப்பி ஓடி இருந்தனர்.

மணமக்கள் வீட்டார் , குருக்கள் , புகைப்பட பிடிப்பாளர்கள் உள்ளிட்ட சிலரை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர் மற்றும் சுமார் 20 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.