மட்டக்களப்பில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

1595510689 corona outbreak 2 3
1595510689 corona outbreak 2 3

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 68 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதா சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை(14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 மணியாலங்களில் 68 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

ஏறாவூர் சுகாதார பிரிவில் 16 பேரும், செங்கலடி சுகாதார பிரிவில் 15பேரும், ஆரையம்பதி சுகாதார பிரிவில் 11பேரும், பட்டிப்பளை சுகாதார பிரிவில் 08பேரும், காத்தான்குடி சுகாதார பிரிவில் 05 பேரும், களுவாஞ்சிகுடி பகுதியில் 04 பேரும், ஓட்டமாவடி சுகாதார பிரிவில் 03பேரும் மட்டக்களப்பு சுகாதார பிரிவில் இரண்டு பேருமாக இவை இனங்காணப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 3935பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன் 57பேர் மரணமடைந்துள்ளனர்.