மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக 4 காவல் நிலையம் திறக்க நடவடிக்கை!

images 6
images 6

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலதிகமாக புதிதாக 4 காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு இந்த மாத இறுதியில் உத்தியோக பூர்வமாக திறப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் சுகத் மாசிங்க தெரிவித்தார்.

மாவட்டத்தில் 12காவல் நிலையங்கள் இயங்கிவரும் நிலையில் மேலும் புதிதாக 4 காவல் நிலையங்கள் அமைப்பதற்காக காவற்துறை மா அதிபர் அனுமதி வழங்கியதையடுத்து வாழைச்சேனை காவற்துறை பிரிவிலுள்ள புணானை காவற்துறை சோதனை சாவடியாக இயங்கிவரும் சோதனைச்சாவடி புணானை காவல் நிலையமும்.

ஏறாவூர் காவல் நிலையப் பிரிவிலுள்ள சந்திவெளி கேரக்காவெளிமடு பகுதில் சந்திவெளி காவல் நிலையமும், மட்டக்களப்பு தலைமையக காவற்துறை பிரிவிலுள்ள கொக்குவில் காவற்துறை சோதனைச் சாவடியாக இயங்கிவரும் சோதனைச்சாவடி கொக்குவில் காவல் நிலையமும், காத்தான்குடி காவற்துறை பிரிவிலுள்ள கர்ப்பலா பிரதேசத்தில் கர்ப்பலா காவல் நிலையமுமாக 4 புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.

இந்த அனுமதியையடுத்து அந்த பகுதிக்கு உதவி காவற்துறை அதிபர். சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர், சென்று இடங்களை பார்வையிட்டு அந்த பகுதிகளில் காவல் நிலையங்களின் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு காவற்துறை பிரிவு எல்லைகள் தீர்மானிக்கப்பட்டு அதற்கான சகல நடவடிக்கைககளும் எடுக்கப்பட்டு தற்காலிகமாக கடமைகள் இயங்க ஆரம்பித்துள்ளதுடன் இந்த மாதக் கடைசியில் சம்பிராய பூர்வமாக காவல் நிலையம் திறப்பதற்காக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.