கொரோனா தொற்று அதிகரிக்கலாம்– சுகாதார அமைச்சு

Hemantha Herath 700x375 1
Hemantha Herath 700x375 1

இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் நாளாந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இவ்வாறு கூறினார்.

அடுத்த சில நாட்களிலும் நாட்டில் கொரோனா தொற்று உறுதியாகும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.