பிளாஸ்டிக் போத்தல்களுக்கு வைப்புத் தொகையை அறவிட தீர்மானம்

வெவ்வேறு உற்பத்திகள் அடங்கிய 750 மில்லிலீற்றர் பிளாஸ்டிக் போத்தல்களைக் கொள்வனவு செய்யும்போது நுகர்வோரிடமிருந்து 10 ரூபா வைப்புத் தொகை பெற்றுக் கொள்வதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த பிளாஸ்டிக் போத்தல்களை மீள்சுழற்சிக்காக, சுற்றாடல் அமைச்சுக்கு முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் தொடர்பில் அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொள்வனவு செய்யப்பட்ட பின்னர் வெற்று பிளாஸ்டிக் போத்தலை மீண்டும் கையளிப்பதன் ஊடாக 10 ரூபா வைப்புத் தொகையை மீளப் பெற்றுக் கொள்ள முடியும்.

அத்துடன், இந்த யோசனைக்கு அமைய சூழலுக்கு விடுவிக்கப்படும் வெற்று பிளாஸ்டிக் போத்தல்களைச் சேர்த்து வழங்கும் எந்தவொரு நபருக்கும் மேலதிக வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் எனச் சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது