மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட 12, 14, வயதுடைய இரு சிறுவர்களை நேற்று திங்கட்கிழமை (14) இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை காவற்துறையினர் தெரிவித்தனர்.
வாழைச்சேனை காவற்துறை பிரிவிலுள்ள கிராமம் ஒன்றில் சம்பவதினமான நேற்று மாலை வீடு ஒன்றில் தாயார் அருகிலுள்ள வீடு ஒன்றுக்கு சென்ற நிலையில் குறித்த சிறுமி வீட்டில் தனிமையில் இருந்தபோது அந்த பகுதியைச் சேர்ந்த 12, 14 வயதுடைய இருசிறுவர்கள் வீட்டினுள் புகுந்து சிறிமியை பாலியல் பலத்தகாரம் செய்ய முயற்சித்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதனையடுத்து சிறுமி பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கதியை தெரிவித்ததையடுத்து அவர்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து குறித்த இரு சிறுவர்களையும் காவற்துறையினர் கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவம் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவற்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.