மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரியை அச்சுறுத்தி கையூட்டுப் பெற்ற காவற்துறையினர்!

bribe 300x171 1
bribe 300x171 1

கொவிட்-19 நோய்த்தொற்று பயணத்தடை காலப்பகுதியில் நடமாடும் மீன் வியாபாரிகளுக்கு நல்லூர் பிரதேச செயலாளரினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது.

அதனைப் பயன்படுத்தி மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரியை அச்சுறுத்தி கோப்பாய் காவல் நிலைய உத்தியோகத்தர்கள் கையூட்டுப் பெற்றுள்ளனர்.

பணத்தை வழங்கிய மீன் வியாபாரி தனது பகுதி கிராம அலுவலகர் ஊடாக நல்லூர் பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவற்துறை உயர்மட்டத்துக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக கையூட்டுப் பெற்ற காவற்துறை உத்தியோகத்தர்களை மீன் வியாபாரி அடையாளம் காட்டியுள்ளார்.மேற்கொண்டு விசாரணைகளை யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் காவற்துறை மா அதிபரின் கண்காணிப்பில் இடம்பெற்று வருகின்றன.-