பண்டிகை காலத்தினை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

defence 1
defence 1

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.

இதனை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில், முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில், குறிப்பாக கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளை உள்ளடக்கி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யயு ம் வகையில் பாதுகாப்புப் பணியாளர்கள் கடந்த இரண்டு வாரங்களாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வழிபாட்டுத் தலங்கள், பொது இடங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.