தனிமைப்படுத்தலில் இருந்த நபர் சடலமாக மீட்பு

IMG 20210616 102405
IMG 20210616 102405

வவுனியா கற்குளி பகுதியில் தனிமைப்படுத்தலிற்குட்படுத்தபட்டிருந்த நபர் இன்று கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் உட்பட அவரின் குடும்பத்தினர் அண்மையில் தனிமைப்படுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை வீட்டிலிருந்த அவரை காணாமல் அவரது உறவினர்கள் தேடியுள்ளனர்.

இதன்போது கிணற்றில் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது. கற்குழி பகுதியை சேர்ந்த கணேசன் இளங்குமரன் (வயது – 51) என்ற நபரே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.