மத்தள விமான நிலைய அபிவிருத்தி- இந்தியாவின் உதவி தேவையில்லை

Mathala
Mathala

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகளுக்கு இந்தியாவின் உதவி பெற்றுக்கொள்ளப்படாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டவட்டமாகத் அறிவித்துள்ளார்.

மத்தள விமான நிலையம், நாட்டின் மாற்று சர்வதேச விமான நிலையமாக இலங்கை விமான நிலைய அதிகார சபையினால் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் இது தொடர்பில் இந்தியாவுடன் எதுவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.