ரணிலையும் உடன் கைது செய்யங்கள் !

2 wwrr
2 wwrr

முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை கைது செய்த வேகத்திலேயே மத்திய வங்கி பிணை முறி மோசடியின் முக்கிய கர்த்தாவான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி நிதி மோசடி குறித்தும் விரைவாக விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும், எதிர்வரும் பெப்ருவரி 15 இற்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்ய வேண்டும் எனவும் இன்றைய சகோதர ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான சகல தகவல்களும் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், அது தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்த தாமதமாக வேண்டியதில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.