பத்மநாபாவின் 31 வது நினைவுதினம் அனுஸ்டிப்பு.

IMG 3216
IMG 3216

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் க.பத்மநாபாவின் 31 வது நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.வவுனியாவில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பத்மநாபாவின் திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மரணித்த ஏனைய தோழர்களையும் நினைவு கூர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

IMG 3211 1

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர் கே.அருந்தவராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன், வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன், கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.