சட்ட அமுலாக்கத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் எதுவித தலையீடுகளையும் மேற்கொள்வதில்லை என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்டத்தை அமுல்படுத்தும் எந்தவொரு நிறுவனங்களுக்கும் தற்போதைய அரசாங்கம் எவ்வித இடையூறுகளை விளைவிக்காது எனவும் சட்ட அமுலாக்கத்தை அரசியலாக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சி முயற்சி செய்து வருவதாகவும் தேவையற்ற கருத்துக்களை தெரிவித்து அரசின் மீது பழி சுமத்துவதாகவும் தெரிவித்தார்.