வவுனியா வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் பெண்ணின் மீது அக்கடையின் உரிமையாளரது மகன் கடுமையாக தாக்கியமையின் காரணமாக குறித்த பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது.
பசார் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் பணி புரியும் தமிழ் பெண் கண்ணாடி பொருள் ஒன்றை உடைத்ததாக தெரிவித்து உரிமையாளரின் மகன் பெண்ணை நிலத்தில் தள்ளிவிட்டு சரமாரியாக தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இதனால் அப்பகுதியில் ஒன்று கூடிய பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் தாக்கியதாக தெரிவிக்கப்படும் நபரையும், அப்பெண்ணையும் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.