மட்டக்களப்பு மாவடி பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கியுள்ள 26 பேரை இலங்கை விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கியிருந்த மூவர் விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலி ஹெப்டர் மூலம் மீட்கப்பட்டனர். தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
இதேவேளை வெள்ள அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் மீட்பு நடவடிக்கைகளுக்காகவும் கடற்படையில் உரிய பாதுகாப்பு பிரிவினர் சம்பந்தப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக ஊடக பேச்சாளர் லெப்டின் கொமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்தார்.