இலங்கையின் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எனினும் அர்ஜுன் மகேந்திரனை சட்டப்படி இலங்கை கொண்டு வருவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும்இதன் போது தெரிவித்திருத்தார்.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை நாடு கடத்துமாறு விடுக்கப்படும் கோரிக்கையின் எழுத்து ஆவணங்கள் கிடைக்க பெற்றவுடன் சிங்கப்பூர் சட்டத்திட்டத்திற்கமைய அர்ஜூன் மகேந்திரனை நாடு கடத்துவது தொடர்பில் ஆராயப்படும் என சிங்கப்பூர் வெளிவிகார அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது,