வவுனியா கனகராஜன்குளம் பகுதியைச் சேர்ந்த ஐ.தே.க ஆதரவாளர் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
வவுனியா பூந்தோட்டம் பெரியார்குளம் பகுதியைச் சேர்ந்த இந்திரலிங்கம் தீபன் என்பவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
குறித்த இளைஞன் தேர்தல் காலத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் ஊடக செயற்பாடுகள் தேர்தல் அறிக்கையிடல் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த கனகராஜன்குளம் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.