யாழ்ப்பாணம் – கரவெட்டி கல்வி கோட்டத்திற்கு உள்பட்ட வதிரி திரு இருதயக் கல்லூரியில் இடர்கால நிகழ்நிலை தொலைக்கல்வி கற்றல்வள நிலையம் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையிலேயே இன்றையதினம் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனால் குறித்த கற்றல் மத்திய நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கரவெட்டி பிரதேச செயலாளர், கோட்டக் கல்வி பணிப்பாளர், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.