இவர்களுக்கு விடுமுறை இல்லை – தொடர் பணி

CTB
CTB

நத்தார் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களின் நலன் கருதி இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் சாரதிகள், நடத்துனர்கள் ஆகியோரின் விடுமுறைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தவகையில், 26 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 1 ஆம் திகதி வரை இவர்களது விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு மேலும் கூறியுள்ளது.

இதேவேளை, பதுளை -கொழும்புக்கு இடையில், 24 ஆம் 27 ஆம் மற்றும் 29 ஆம் திகதிகளில் விசேட ரயில் சேவைகள் இடம்பெறும் எனவும் அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.