பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்து வழக்கின் தீர்ப்பு!

8 d 1
8 d 1

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து தமது பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட மூன்று இளைஞர்களுக்கு எதிராக டுபாய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.

டுபாயில் பணிபுரியும் மூன்று இலங்கை இளைஞர்கள் தமது பேஸ்புக்கில் பரபரப்பான கருத்துக்களை பதிவிட்டனர்.இது குறித்து கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஓமல்பே சோபித தேரர் தமது கருத்தை வெளியிட்டார்.

குறித்த மூன்று இளைஞர்களும் டுபாயின் பாதுகாப்பு துறையில் சேவை புரிவதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.அத்துடன் ஏப்ரல் 21 தாக்குதல் இலங்கையினரை மாத்திரமின்றி உலகெங்கும் உள்ள அமைதியான மக்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்டதாகவும் ஓமல்பே சோபித தேரர் கூறினார்.

சம்பவத்தில் தலையிட்டு குறித்த இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அரசாங்கத்திடம் ஓமல்பே சோபித தேரர் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.