யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தல் நாளைய தினம் முதல் ஆரம்பமாகவுள்ளது.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ. கேதீஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 49,602 பேருக்கு முதலாம் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது தடவையாக 46, 648 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.