கடந்த ஆறு மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 4,000 முறைப்பாடு

rape 1 1
rape 1 1

கடந்த ஆறு மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக கிட்டத்தட்ட 4,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும் கடந்த ஆறு மாதங்களில் சுமார் 48,000 தொலைபேசி அழைப்புகளிலிருந்து தகவல்கள் கிடைத்ததாகவும் அந்த ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு சிறுவர் துஸ்பிரயோகம் குறித்து 8,165 முறைப்பாடுகள் கிடைத்தன என்றும் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.