மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபை பிரிவுகளில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (5) காலை மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் ஆடைத் தொழிற்சாலை பிரதான வீதியில் அமைந்துள்ள பொது மண்டபத்தில் குறித்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் போது கிராம அலுவலகர் பிரிவுகள் ஊடாக ஒதுக்கப்பட்ட நேரங்களுக்கு அமைய செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது.
நாளை (6) காலை 8 மணி முதல் 2 ஆவது தடவையாக தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.