கிளிநொச்சியில் 20 இலட்சம் பெறுமதியான வீடு கையளிப்பு

IMG 20210705 111508
IMG 20210705 111508

இராணுவத்தினரால் புதிதாக நிர்மானிக்கப்பட்ட 20 இலட்சம் பெறுமதியான வீடு இன்று கையளிக்கப்பட்டது

குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.

கிளிநொச்சி இராணுவ கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்.பி.ரணசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக 57வது படைப்பிரிவினால் குறித்த வீடு புதிதாக நிர்மானிக்கப்பட்டது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிருஸ்ணபுரம் பகுதியில் வாழும் கூலித்தொழிலாளி குடும்பமான அரியதாஸ் ரமேஸ் என்ற 4 அங்கத்தவர் கொண்ட குடும்பத்திற்கு இவ்வாறு இராணுவத்தினரால் 20 இலட்சம் பெறுமதியில் வீடு கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி இராணுவ கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்.பி.ரணசிங்க கலந்துகொண்டு வீட்டினை குடும்பத்தினரிடம் கையளித்தார்.