ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவி சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்படாவிட்டால் பொதுத்தேர்தலில் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ஆதரவு அணி தனி வழி செல்ல தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சியை உருவாக்கும் நோக்கம் சஜித் அணிக்கு இல்லை என கூறப்படும். அதேவேளை
கட்சியின் தலைமை பதவி அவருக்கு வழங்கப்படாவிட்டால் கட்சிக்குள் இருந்துகொண்டு புதிய கூட்டணி ஒன்றில் பொதுத்தேர்தலை சந்திப்பது தொடர்பில் பரந்துபட்ட பேச்சு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது .