மாற்று அணி தமிழ் தேசியக் கூட்டமைப்பை பாதிக்கச் செய்யும் _ சித்தார்த்தன்

download 17
download 17

தமிழ் மக்கள் விரும்பினால், அடுத்த தேர்தலின் ஊடாக புதிய தலைமையொன்றை உருவாக்குவார்கள் என புளொட் அமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவிக்கின்றார்.

புளொட் அமைப்பின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்றது.

இதனையடுத்து, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, புளொட் அமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த காலங்களைப் போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களைப் பெறுவது கேள்விக்குறியாக இருந்தாலும் அதிகளாவன ஆசனங்களைப் பெறுவதில் நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்த அவர் அதற்க்கான காரணமாக மாற்று அணி ஒன்று உருவாகும் போது அது தமிழ் தேசியக் கூட்டமைப்பை பாதிக்கச் செய்யும்.

போட்டிகள் கூடுகின்ற போது கட்டாயமாக பாதிப்பு இருக்கும். அது தொடர்பாக நாங்கள் பேசுகின்றபோது கூடியவரையில் ஒத்த கருத்துள்ள கட்சிகளைக் கூட்ட முடியுமாயின் இன்னும் கூட்டவேண்டும் என்ற அவிப்பிராயமும் இருக்கின்றது எனவும் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .