வவுனியா மாவட்ட புகைப்படக் கலைஞர்களின் வருடாந்த ஒன்றுகூடல் இடம்பெற்றுள்ளது
குறித்த நிகழ்வு வவுனியா மாவட்ட ஒளிப்பட, புகைப்பட கலைஞர்கள் சங்கத் தலைவர் இரங்கசாமி தலைமையில் வவுனியா பிரதேச கலாசார மண்டபத்தில் நேற்று 21.12.2019(சனிக்கிழமை) மாலை இடம்பெற்றது.
இதில் பிரதம விருந்தினராக வவுனியா பிரதேச கலாசார உத்தியோகத்தர் வீ.பிரதீபன் கலந்துகொண்தத்துடன் கலைஞர்களுக்கான அடையாள அட்டைகளையம் வழங்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் சங்கச் செயலாளர் பொன் சி. சுபாஸ்சிங்கம், பொருளாலர் துரை, உப தலைவர் லக்ஸ்மன் மற்றும் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .