அதிகளவான ஆடுகள் ஏற்றிச்சென்றவர்களை மடக்கிய காவல்துறையினர்

IMG20210707154007 01
IMG20210707154007 01

வாகனம் ஒன்றில் அளவுக்கதிகமான ஆடுகளை ஏற்றிச்சென்றவர்களை கனகராயன்குளம் காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். யாழில் இருந்து மிகிந்தலை பகுதிநோக்கி சென்ற கூளர் ரக வாகனத்தினை கனகராயன்குளம் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அதனை வழிமறித்து சோதனைகளை முன்னெடுத்தனர். 

இதன்போது குறித்த வாகனத்தில் அளவுக்கதிகமான வகையில் 68 ஆடுகளை ஏற்றிச்சென்றமை தெரியவந்தது.
அவர்களை கைது செய்த காவல்துறையினர் வவுனியா நீதிமன்றில் அவர்களிற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்துள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.