ஜனாதிபதியின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

gota5
gota5

காணாமல் போனவர்களை மீளக்கொண்டு வரமுடியாது எனவும் அவர்களுக்கான மரணச் சான்றிதழ்களை வழங்குவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அண்மையில் தெரிவித்தருந்தார்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இவ்விடயம் தொடர்பில் சர்வதேசத்திடம் நீதி கோரியும் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றிலில் காலை 10.30 மணியளவில் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி இன்று நடைபெறவுள்ளது.

வடக்கு, கிழக்கு ஆகிய மாகாணங்களின் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தப் பேரணியில், அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.