கவனயீனமாக வாகனம் செலுத்தியமை மற்றும் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளில் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரிட்டுள்ளது.
பொலனறுவை நீதவான் இருவரையும் எதிர்வரும் 27ம் திகதி வரை விலக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
பொலனறுவை – மனம்பிட்டிய, கல்லேல்ல பகுதியில் கர்ப்பிணி பெண்கள் உட்பட 54 பேருடன் வெள்ள பகுதியினூடாக பயணித்தமையின் காரணமாக குறித்த பேருந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருந்தது. இந்நிலையில் பேருந்தில் பயணித்த அனைவரும் காப்பாற்றப்பட்டிருந்த நிலையில் பேருந்தின் சாரதியும், நடத்துனரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.